ஒருவர் கைது; மூவரை தேடி நடவடிக்கை
குருணாகல் நீதவான் நீதிமன்ற வளாக சிறையிலிருந்து 4 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
வழக்கு நடவடிக்கைக்காக அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்களே இவ்வாறு தப்பிஞ் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மூவரை தேடி கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

0 Comments